பலுசிஸ்தான்:
பாகிஸ்தானில் லாரி -வேன் மோதிய விபத்தில் 6 பேர் உயிரிழந்தனர் என்றும், 3 பேர் காயமடைந்தனர் என்றும் காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய காவல்துறை அதிகாரி, பாகிஸ்தானின் தென்மேற்கு பலுசிஸ்தான் மாகாணத்தில் மாகாணத்தின் மஸ்துங் பகுதியில் 12-க்கு மேற்பட்ட பயணிகளை ஏற்றிச் சென்ற வேன் எதிர் திசையிலிருந்து வந்த லாரி மீது மோதியதில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. இந்த விபத்தில் உயிரிழந்த ஆறு பேரில் இரண்டு பெண்கள் உட்பட அனைவரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள், காயமடைந்தவர்களும் அவர்களது நெருங்கிய உறவினர்கள் என்று தெரிய வந்துள்ளது. காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் ஒருவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

பலூசிஸ்தானில் சாலை விபத்துக்கள் நடப்பது வாடிக்கையான ஒன்று. பராமரிக்கப்படாத வாகனங்கள் மற்றும் மோசமான சாலைகள் ஆகியவையே இந்த விபத்துகளுக்குக் காரணமாக இருந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.