கொழும்பு:
லங்கையின் கிண்ணியாவில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 6 பேர் உயிரிழந்ததாக இலங்கை கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.
உள்ளூர் நேரப்படி 07.30 மணியளவில் படகு கவிழ்ந்த போது கிண்ணியா நகரில் உள்ள குளம் ஒன்றின் பாடசாலைக்கு மாணவர்களையும், ஆசிரியர்களையும் ஏற்றிச் சென்ற படகு கவிழ்ந்ததாக காவல்துறை செய்தி தொடர்பாளர் நிஹால் தல்துவா தெரிவித்தார்.
கிராம மக்கள், காவல்துறையினர் மற்றும் கடற்படையினருடன் இணைத்து விபத்தில் சிக்கிய குழந்தைகள் உள்பட 20 பேரைக் காப்பாற்றியுள்ளனர்.
உயிரிழந்தவர்களில் நான்கு பாடசாலை மாணவர்கள் உட்பட ஆறு பேர் என்று காவல் துறை அதிகாரி தல்துவா உறுதிப்படுத்தியுள்ளார்.
விபத்துக்குள்ளான படகில் 35 பேர் வரை பயணம் செய்துள்ளதாகவும், இந்த படகு கவிழ்ந்ததற்கான காரணம் இதுவரை தெரியவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.