சென்னை: தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில்  5,175 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளதால்,  பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 2,73,460 ஆக அதிகரித்துள்ளது.
இன்று ஒரே நாளில் 6,031 பேர் தொற்று பாதிப்பில் இருந்து குணமடைந்து உள்ளனர். இதனால் இதுவரை குணமடைந்தோர் எண்ணிக்கை 2,14,815  ஆக உயர்ந்துள்ளது.
அதிகபட்சமாக கடந்த 24 மணி நேரத்தில் 112 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை  4461 ஆக அதிகரித்து உள்ளது.
இன்று பாதிக்கப்பட்டுள்ள  5,175 பேரில் 1044 பேர் சென்னையைச் சேர்ந்தவர்கள், 38 பேர்    வெளி மாநிலங்களைச் சேர்ந்தவர்கள், 2 பேர் வெளிநாடுகளை சேர்ந்தவர்கள், மற்றவர்கள் தமிழக மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள்.
தற்போதைய நிலையில், கொரோனா சிகிச்சை மேற்கொள்பவர்களின் எண்ணிக்கை  54,184
இதுவரை கொரோனா சோதனை உறுதி செய்யப்பட்டவர்கள்  2,73.460 பேர்.
இன்று வரை கொரோனா சோதிக்கப்பட்ட மொத்த மாதிரிகளின் எண்ணிக்கை
61.1661, இதுவரை 29,53,561 பேருக்கு சேததனை நடத்தப்பட்டுள்ளது.