சென்னை:
முதல்வர் உடல்நிலை குறித்து வதந்தி பரப்புவோர்களை சைபர் கிரைம் போலீசார் கண்காணித்து வருகின்றனர்.
தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா கடந்த 22ஆம் தேதி முதல், சென்னை அப்போலோ மருத்துவமனையில் காய்ச்சல்மற்றும் நீர்ச்சத்துக் குறைபாடு ஆகியவற்றுக்குச் சிகிச்சை பெற்று குணம் அடைந்து வருவதாகவும், ஆனாலும் இன்னும்சில நாட்கள் மருத்துவமனையிலே இருக்க வேண்டுமென்று அப்போலோ மருத்துவமனை தெரிவிப்பதாகவும் செய்திகள்வருகின்றன.

இந்நிலையில் ஜெயலலிதாவின் உடல்நிலை பற்றி தேவையில்லாத வதந்திகள் சமூகவலைதளங்களில் பரப்பப்பட்டு வருகிறது .பேஸ்புக், வாட்ஸ்-அப் உள்ளிட்டவற்றில் ஜெயலலிதாவின் உடல்நிலை பற்றிய வதந்திகள் தொடர்ந்து வெளியாகி கொண்டே இருக்கின்றன.
தமிழச்சி என்ற பெண் தனது பேஸ்புக்பக்கத்தில் கடந்த சிலநாட்களுக்கு முன்னர் முதல்வர்  ஜெயலலிதாவின் உடல்நிலை பற்றி வெளியிட்ட பதிவு பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த பதிவை போட்டதற்காக அவருக்கு எதிராக இணையதளங்களில் கண்டனங்களும் குவிந்தன. இதுகுறித்து அ.தி.மு.க. தகவல் தொழில்நுட்பபிரிவு சார்பில் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் செய்யப்பட்டது.
இதனையடுத்து தமிழச்சிமீது சைபர்கிரைம் போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர். இதுபோன்று வதந்தியை பரப்புபவர்கள்மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் போலீசார் எச்சரித்தனர்.
இருந்தாலும், முதல்வரின்  உடல்நிலை பற்றிய வதந்தி அவ்வப்போது  பரப்பப்பட்டுக்கொண்டேதான் இருக்கிறது.
முதல்வர் குறித்த வதந்திகள் பரப்பும் சுமார் 50 பேர் கண்காணிக்கப்பட்டு வருவதாகவும், அவர்களின் சமூக வளைதளங்கள் பற்றி ஆராய்ந்து வருவதாகவும் சைபர் கிரைம் போலீசார் தெரிவித்து உள்ளனர்.