சென்னை

ன்று காலை தமிழகம் முழுவதும் 5 ஆம் கட்ட மெகா தடுப்பூசி முகாம்கள் தொடங்கி உள்ளன.

நாடெங்கும் கொரோனா இரண்டாம் அலை பாதிப்பு குறைந்து வருகிறது.  விரைவில் மூன்றாம் அலை பாதிப்பு ஏற்படலாம் என மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.   எனவே இதையொட்டி நாடெங்கும் தடுப்பூசி போடும் பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. 

தமிழகத்தில் கடந்த 4 வாரங்களாக ஒவ்வொரு ஞாயிறு அன்றும் மெகா தடுப்பூசி முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன.  இந்த தடுப்பூசி முகாம்களில் இலக்கை தாண்டி ஒவ்வொரு முறையும் அதிக அளவில் கொரோனா தடுப்பூசிகள் போடப்படுகின்றன. 

அவ்வகையில் இன்று தமிழகம் முழுவதும் 5 ஆம் கட்ட தடுப்பூசி முகாம்கள் தொடங்கி உள்ளன.  மாநிலத்தில் 30000 முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன.  இதில் சென்னையில் மட்டும் 1600 முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.   இதைப் பயன்படுத்தி தகுதி உடையோர் தடுப்பூசி போடுமாறு தமிழக அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.