மிர்தசரஸ்

ஞ்சாப் மாநில புதிய முதல்வராக சரண்ஜித் சிங் சன்னி தேர்வு செய்யப்பட்டுள்ளதாக காங்கிரஸ் அறிவித்துள்ளது.

 

கடந்த சில நாட்களாகப் பஞ்சாப் முதல்வர் கேப்டன் அமரிந்தர் சிங் மற்றும் முன்னாள் கிரிக்கெட் வீரரும் காங்கிரஸ் தலைவர்களில் ஒருவருமான நவ்ஜோத் சிங் சித்துவுக்கும் இடையே கடும் மோதல் நிலவியது.   சித்து ஏற்கனவே அமரிந்தர் சிங் அமைச்சரவையில் இடம் பெற்று பிறகு மனத்தாங்கல் காரணமாகப் பதவி விலகியர் என்பது குறிப்பிடத்தக்கது. 

இருவரிடையே மோதம் போக்கு நாளுக்கு நாள் அதிகரித்தது.  காங்கிரஸ் மேலிடம் இருவரையும் சமாதானம் செய்து நவஜோத் சிங் சித்துவை மாநில காங்கிரஸ் தலைவராக நியமித்தது.  இது அமரிந்தர் சிங்குக்கு அதிருப்தியை அளித்தது.  இந்நிலையில் பஞ்சாப் மாநில  முதல்வர் பதவியில் இருந்து நேற்று அமரிந்தர் சிங் விலகினார்.

இது மேலும் பரபரப்பை உண்டாக்கியது.  பஞ்சாப் மாநிலத்தின் அடுத்த முதல்வர் யார் என்பது குறித்துப் பல ஊகங்கள் செய்திகளாக வெளியாகின.  அவற்றுக்கு முற்றுப்புள்ளி வைப்பது போல் காங்கிரஸ் கட்சி பஞ்சாப் மாநில புதிய முதல்வராக 48 வயதே ஆன சரண்ஜித் சிங் சன்னியை நியமித்துள்ளது.