கடலுர்: எடப்பாடி பழனிசாமி அரசியல் அமாவாசை என்றும், 40-ம் நமதே நாடும் நமதே என அதிமுக பொதுச்செலாயளர் எடப்பாடி பழனிச்சாமியை, முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் கடுமையாக விமர்சனம் செய்தார்.

தமிழகத்தில்  வரும் 19ந்தி மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதன் காரணமாக தமிழக  அரசியல் கட்சித் தலைவர்கள், வேட்பாளர்களை ஆதரித்து தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அரசியல் களம் கோடை வெயிலை விட அனல் பறக்கிறது.

இந்த நிலையில்,   கடலூர் மாவட்டத்தில் பிரசாரம் மேற்கொண்ட முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் கடலூர் மாவட்டம் சிதம்பரம் லால்புரம் பகுதியில் பிரச்சார பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன், மயிலாடுதுறை நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர்  வழக்கறிஞர் சுதா ஆகியோருக்கு ஆதரவு கோரினார்.

இதைத்தொடர்ந்து நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய மு.க.ஸ்டாலின்,   இட ஒதுக்கீட்டிற்கு எதிராக பாஜக- பாமக கூட்டணி வைத்துள்ளது, பாஜக – பாமக கூட்டணி சந்தர்ப்பவாத கூட்டணி, இந்தியா கூட்டணி கொள்கை கூட்டணி என விமர்சித்தவர், நாட்டில், இந்தியா கூட்டணி ஆட்சி அமைத்தால் பொருளாதார சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் என்றார்.

நமது பிரதமர் மோடிக்கு சமூக நீதி மீது அக்கறை இல்லை, சமூக நீதிக்கும் அவருக்கும் சம்பந்தம் இல்லை, பன்முகத்தன்மை கொண்ட இந்தியாவை பகையாளி இந்தியாவாக மாற்ற நினைப்பவர் மோடி என விமர்சித்தவர்,

தமிழ்நாட்டில் நிலவும் சமூக நீதி இந்தியா முழுவதும் பரவ கிடைத்த கூட்டணி இந்திய கூட்டணி என்றும், மீண்டும் மோடி பிரதமர் ஆனால் நாட்டில் ஜனநாயகம் இருக்காது. பொய்களை வரலாறாக எழுதுவார்கள், ஆட்சி டெல்லியில் நடக்கிறதா? நாக்பூரில் நடக்கிறதா என்று தெரியாத நிலை வரும் என்றும் கூறினார்.

தமிழ்நாட்டில் நீட் தேர்வு நுழைய காரணமானவர் எடப்பாடி பழனிசாமி. பிரதமர் மோடி இந்தியாவிற்கு இருண்ட ஆட்சியை தருவது போல தமிழகத்திற்கு இருண்ட ஆட்சியை தந்தவர் பழனிசாமி, பச்சை துண்டு போட்டு கொண்டு விவசாயிகளுக்கு பச்சை துரோகம் செய்தவர் பழனிசாமி. அரசியல் அமாவாசையாக பழனிசாமி உள்ளார் எனவும் முதல்வர் ஸ்டாலின் விமர்சித்துடன்,  அதிமுக இருக்கும் தொகுதிகளையும் திமுக வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் பறிக்கும் எனவும் இதை நான் ஆணவத்தில் சொல்லவில்லை திமுக செய்த நலத்திட்டங்கள் அந்த வெற்றியைத் தரும் என்றார்.

பாசிசத்தை வீழ்த்த இந்தியாவைக் காக்க ஸ்டாலின் அழைக்கிறேன் 40-ம் நமதே நாடும் நமதே என்று உரையை முடித்தார்.