ளுந்தூர்பேட்டை

நேற்று நள்ளிரவில் உளுந்தூர்ப்பேட்டை  அருகே நடந்த தீ விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் உயிர் இழந்துள்ளனர்.

நந்தாமூர் என்னும் சிற்றூர் உளுந்தூர்பேட்டை அருகே உள்ளது  இந்த ஊரைச் சேர்ந்த பொன்னுரங்கன் என்னும் உர வியாபாரிக்கு இரு மகன்களும் 3 மகள்களும் உள்ளனர்.  அவரது மகன் திரவியம் என்பவருக்கு மணமாகிக் கடந்த 2 ஆண்டுகளாக மனநிலை சரியில்லாமல் பொன்னுரங்கனுடன் வசித்து வருகிறர்.

நேற்று நள்ளிரவு திரவியம் தனது இரு பெண் குழந்தைகளுடன் வீட்டில்  உடல் முழுவதும் தீக்காயங்களுடன் இறந்து கிடந்தார்.  அதைக் கண்ட பொன்னுரங்கன் அந்த அறையினுள் சென்றபோது ஏற்பட்ட மூச்சுத்திணறலால் அவரும் அதே இடத்தில் மரணம் அடைந்தார்.

இவ்வாறு ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உயிரிழந்தது அப்பகுதியில் பெரும் சோகத்தை உண்டாக்கி இருக்கிறது   சம்பவம் குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சடலங்களைப் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.  இது தற்கொலையா அல்லது விபத்தா என்பது குறித்து காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது.