மணிலா:
பிலிப்பைன்ஸ் சிறை தப்பிக்க முயன்ற 4 கைதிகள் கொல்லப்பட்டனர்.
பிலிப்பைன்ஸ் சிறை தப்பிக்க முயன்ற 4 கைதிகள் கொல்லப்பட்டனர்.

இதுகுறித்து சிறை அதிகாரிகள் தெரிவிக்கையில், பிலிப்பைன்ஸின் சூரிகாவோ டெல் சுர் மாகாணத்தில் சிறையிலிருந்து கைதிகள் தப்பிக்க முயசி செய்தனர். இவர்களைத் தடுக்க காவல்துறையினர் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் சிறையிலிருந்து தப்பிக்க முயன்ற 4 கைதிகள் கொல்லப்பட்டனர்.

உள்ளூர் நேரப்படி காலை 7 மணிக்குச் சற்று முன் துப்பாக்கிச் சூடு நடந்தது, 11-க்கும் மேற்பட்ட கைதிகள் சமையலறையில் காலை உணவு செய்யும் சிறை ஊழியர்களைக் கடத்திச் செல்ல முயற்சி செய்தனர் என்று சிறை மேலாண்மை மற்றும் தண்டனை அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் குறித்து விசாரணை நடந்து வருகிறது.
Patrikai.com official YouTube Channel