கமதாபாத்

மேற்கு இந்திய கிரிக்கெட் தொடரில் பங்கு பெற உள்ள 4 இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது/

வரும் 8 முதல் 20 ஆம் தேதி வரை  இந்திய கிரிக்கெட் அணி மேற்கு இந்திய அணிகளுடன் ஒரு நாள் மற்றும் டி 20 போட்டிகளில் விளையாட உள்ளது,   இந்தியாவில் மூன்றாம் அலை பரவலில் பல முக்கிய  புள்ளிகள் கொரோனாவால் கடும்  பாதிப்பு அடைந்துள்ளனர்.

தற்போது மேற்கு இந்திய அணியுடன் போட்டியிடும் இந்திய அணியில் இடம் பெற்றிருந்த பேட்ஸ்மேன்கள் ஷிகர் தவான், ஷ்ரேயஸ் ஐயர், ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் பவுலர் சைனிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

மொத்தம் இந்திய அணியில் 4 வீரர்கள் மற்றும் 3 நிர்வாகிகள் என 7 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது  இந்திய அணி அகமதாபாத் நகரில் முகாமிட்டுள்ளது. இந்நிலையில் வீரர்களுக்குத் தொற்று உறுதியாகி உள்ளது.

எனவே மீண்டும் அணியில் இடம் பிடித்துள்ள வீரர்கள் மற்றும் நிர்வாகிகளுக்கு கொரோனா பரிசோதனை செய்ய இந்திய கிரிக்கெட் வாரியம் முடிவு செய்துள்ளதாகவும் வீரர்கள் தொற்று பாதிப்பிலிருந்து குணமடையும் வரையில் தனிமையில் இருப்பார்கள் எனவும்  தெரிவிக்க பட்டுள்ளது .