காபூல்: ஆப்கானிஸ்தானில் அரசு ஊழியர்கள் 4 பேர் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளனர்.

தலைநகர் காபூலில் உள்ள பாக் இ தவுத் பகுதியில் இன்று காலை இந்த சம்பவம் நடந்துள்ளது.  அரசின் ஊரக மறுவாழ்வு மற்றும் வளர்ச்சித் துறையில் பணியாற்றும் 4 ஊழியர்கள் பயணம் செய்த வாகனத்தை அடையாளம் தெரியாத நபர்கள் தடுத்து நிறுத்தி உள்ளனர்.

பின்னர் அவர்கள் தங்கள் கைகளில் இருந்த துப்பாக்கியால் சரமாரியாக சுட்டனர். இந்த தாக்குதலில் அரசு ஊழியர்கள் 4 பேரும் சம்பவ இடத்திலேயே இறந்தனர்.

தாக்குதலுக்கு இதுவரை எந்த ஒரு தீவிரவாத இயக்கமும் பொறுப்பு ஏற்கவில்லை. முன்னதாக அங்கு நிகழ்ந்த குண்டுவெடிப்பில் ஒருவர் காயம் அடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.