புளோரிடா:
மெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் மியாமி கடற்கரை அருகே 12 மாடி குடியிருப்பு கட்டிடத்தின் ஒரு பகுதி சரிந்து விழுந்த விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர்.

நேற்று இரவு பலத்த சத்தத்துடன் கட்டிடம் இடிந்து விழுந்த நிலையில், முதற்கட்டமாக இடிபாடுகளில் சிக்கி காயமடைந்த 35 பேர் மீட்கப்பட்டனர். தொடர்ந்து, இரவு பகலாக இடிபாடுகளில் சிக்கியுள்ளோரை மீட்கும் பணி துரிதமாக நடைபெற்று வந்த நிலையில் 159க்கும் மேற்பட்டோரை காணவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதனால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. விபத்து ஏற்பட்ட பகுதியில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ள நிலையில், கார் பார்க்கிங் பகுதியில் சுவற்றில் துளையிட்டு இடிபாடுகளில் சிக்கியுள்ளோரை மீட்பதற்கான முயற்சிகளும் நடைபெற்று வருகின்றன.