பிரேசிலியா

பிரேசில் நாட்டில் டெங்கு காய்ச்சலால் 391 பேர் உயிர் இழந்துள்ளனர்.

தென் அமெரிக்காவில் உள்ள பிரேசிலில் டெங்கு காய்ச்சல் பரவல் அதிகரித்து உள்ளது. அங்கு டெங்கு காய்ச்சல் பரவலைக் கட்டுப்படுத்த அந்த நாட்டின் சுகாதாரத்துறையினர் கடுமையாகப் போராடி வருகிறார்கள்.  ஆயினும் டெங்கு காய்ச்சல் பரவலின் வேகம் குறைந்தபாடில்லை.

டெங்கு காய்ச்சலுக்கான பரிசோதனைகளைப் பொதுமக்கள் அதிக அளவில் மேற்கொள்ள அரசு வலியுறுத்தி வருகிறது. இந்த ஆண்டு இதுவரை 15 லட்சத்து 83 ஆயிரம் பேர் டெங்கு காய்ச்சல் பாதிப்பு அடைந்ததாகவும், அதில் 12 ஆயிரத்து 652 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வந்தனர் எனவும் அந்த நாட்டின் சுகாதாரத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டெங்கு காய்ச்சல் பாதிப்புக்குள்ளாகி இந்த ஆண்டு இதுவரை 391 பேர் உயிரிழந்து உள்ளதாகவும் மேலும் 854 இறப்புகள் விசாரணையில் உள்ளதாகவும் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.  தற்போது டெங்கு காய்ச்சல் பாதிப்பு விகிதம் இந்த பகுதிகளில் 1,00,000 மக்களுக்கு 757.5 ஆக உள்ளது.