சென்னை

தமிழகத்தில் மாவட்ட வாரியாக ஒமிக்ரான் பாதிப்பு விவரம் வெளியாகி உள்ளது.

தென் ஆப்ரிக்காவில் கண்டறியப்பட்ட உருமாறிய  கொரோனாவான ஒமிக்ரான் பாதிப்பு தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்களில் வேகமாகப் பரவி உள்ளது.  இன்று மாவட்ட வாரியான ஒமிக்ரான் பட்டியலை அரசு வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் இதுவரை மொத்தம் 118 பேர் பாதிக்கப்படுள்ளனர்.  அதில் 66 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு தற்போது 52 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

அதிகபட்சமாகச் சென்னையில் 95 பேர் பாதிக்கப்பட்டு அதில் 57 பேர் டிஸ்சார்ஜ் ஆகி தற்போது 38 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

அடுத்ததாக செங்கல்பட்டு மாவட்டத்தில் 5 பேர் பாதிக்கப்பட்டு 4 பேர்  குணம் அடைந்து ஒருவர் சிகிச்ச்சையில் உள்ளார்

மதுரையில் 4 பேர் பாதிக்கப்பட்டு அனைவரும் சிகிச்சையில் உள்ளனர்.

திருவள்ளூர் மாவட்டத்தில் 3 பேர் பாதிக்கப்பட்டு அனைவரும் சிகிச்சையில் உள்ளனர்.

திருவண்ணாமலை, கன்னியாகுமரி மாவட்டத்தில் தலா இருவர் பாதிக்கப்பட்டு இருவரும் குணம் அடைந்துள்ளனர்

சேலம், திருவாரூர், கோவை, புதுக்கோட்டை, தஞ்சை, மற்றும் ராணிப்பேட்டை மாவட்டத்தில் தலா ஒருவர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

திருச்சி மாவட்டத்தில் ஒருவர் பாதிக்கப்பட்டு குணம அடைந்துள்ளார்.