புதுச்சேரி:

புதுச்சேரியில் , இன்று  மேலும் 30  பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது.

புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி 5 நாட்கள் தனிமைப்படுத்துதலில் உள்ள நிலையில், சட்டப் பேரவை ஊழியர் உள்பட 42 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி இருந்தது. அங்கு இதவரை 714 பேர் பாதிக்கப்பட்ட நிலையில், தற்போதைய நிலையில் 430 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை  272 பேர் நோய்த் தொற்றில் இருந்து குணமான நிலையில் 12 பேர் பலியாகி உள்ளனர்.
இந்த நிலையில் இன்று மேலும் 30 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளதையடுத்து, மொத்த பாதிப்பு எண்ணிக்கை  739 ஆக உயர்ந்துள்ளதாக  மாநில சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணராவ் தெரிவித்து உள்ளார்.