சென்னை: தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ள தகவலின்படி, இன்று மேலும் 1021 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில், சென்னையில் 120 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். இன்று 14 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 29 மாவட்டங்களில் புதிய உயிரிழப்பு இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

மாநிலம் முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டார் மொத்த எண்ணிக்கை 27,01,614 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவுக்கு உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 36,097 ஆக அதிகரித்து உள்ளது.   இதுவரை குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 26,53,832  ஆக உயர்ந்துள்ளது.

தொற்று பாதிப்பில் சென்னை முதலிடத்தில் உள்ளது.  சென்னையில் இன்று மேலும்  120 பேர் கொரோனானால் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் மொத்தம் 554554- பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சென்னையில் யாரும் உயிரிழக்காததால்,  மொத்த உயிரிழப்பு 8542ஆக உள்ளது. கடந்த 24மணி நேரத்தில் 138 பேர் குணமடைந்துள்ளதால், இதுவரை 54,45,58 பேர் குணமடைந்துள்ளனர். தற்போது சென்னையில் 1454 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

மாவட்டம் வாரியாக கொரோனா பாதிப்பு:

அரியலூர் 4
செங்கல்பட்டு 85
சென்னை 120
கோவை 116
கடலூர் 18
தர்மபுரி 12
திண்டுக்கல் 7
ஈரோடு 76
கள்ளக்குறிச்சி 15
காஞ்சிபுரம் 32
கன்னியாகுமரி 16
கரூர் 23
கிருஷ்ணகிரி 18
மதுரை 14
மயிலாடுதுறை 3
நாகப்பட்டினம் 12
நாமக்கல் 44
நீலகிரி 17
பெரம்பலூர் 4
புதுக்கோட்டை 11
ராமநாதபுரம் 2
ராணிப்பேட்டை 11
சேலம் 59
சிவகங்கை 10
தென்காசி 3
தஞ்சாவூர் 40
தேனி 5
திருப்பத்தூர் 8
திருவள்ளூர் 32
திருவண்ணாமலை 15
திருவாரூர் 24
தூத்துக்குடி 12
திருநெல்வேலி 12
திருப்பூர் 69
திருச்சி 39
வேலூர் 19
விழுப்புரம் 8
விருதுநகர் 6