சென்னை: தமிழகத்தில் இன்று கொரோனா வைரசால் 1,538 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில்   189 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் மேலும்  1,538 பேர் கொரோனாவால் புதிதாக பாதிப்படைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுவரைபாட்ட நிலையில், இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 26,11,837 பேர் ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் இன்று மட்டும் 189 பேர் கொரோனாவால் பாதிப்படைந்துள்ளனர்.

தமிழகத்தில் கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 34,878 ஆக அதிகரித்துள்ளதுடன், இதுவரையில் 25,59,637 பேர் சிகிச்சை முடிந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை 4,20,15,963 பேருக்கு கொரோனா மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளது. மேலும் தற்போது கொரோனா வார்டில் 17,322 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்று தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

மாநில தலைநகர சென்னையில்  189 பேர் பாதிக்கப்பட்டு இதுவரை சென்னையில் 5,43,786 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் நேற்று 2 பேர் சிகிச்சை பலனின்றி உயிர் இழந்துள்ளனர்.  இதன்மூலம் பலி எண்ணிக்கை 8,397 ஆக அதிகரித்துள்ளது.நேற்று 218 பேர் குணம் அடைந்து மொத்தம் 5,33,516 பேர் குணம் அடைந்துள்ளனர்.  தற்போது,  சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை 1,873 ஆகி உள்ளது.

29.08.2021 நிலவரப்படி, சென்னையில் மொத்தம் 39,29,480 தடுப்பூசி போடப்பட்டுள்ளது மற்றும் 29.08.2021 அன்று 31,646 டோஸ்கள் வழங்கப்பட்டுள்ளன.

சென்னையில் மண்டலம் வாரியாக கொரோனா பாதிப்பு: