சென்னை: தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் புதிதாக 6,352 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 4,15,590 ஆக அதிகரித்துள்ளது என்று தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

அதிகபட்சமாக சென்னையில் நேற்று மட்டும் 1285 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி யுள்ளது.  இதனால் சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1,33,173 ஆக அதிகரித்துள்ளது.

நேற்று மட்டுமே 1,159 பேர் கொரோனாவில் இருந்து மீண்டுள்ளனர். இதுவரை கொரோனா தொற்று பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை  1,16,808 ஆக அதிகரித்துள்ளது.

தற்போதைய நிலையில், சென்னையில் மட்டும் 13,653 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

நேற்று ஒரே நாளில் சென்னையில் மட்டும் 17 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர். இதுவரை 2,712 பேர் சென்னையில் மட்டும் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர்.

ஒரே நாளில் 13,565 பேருக்கு கொரோனா சோதனை நடத்தப்பட்டுள்ளது.