சென்னை: தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ள நிலையில் கடந்த 2 நாளில் 3 மாணவர்கள் மற்றும் ஒரு ஆசிரியருக்கு கொரோனா உறுதி  செய்யப்பட்டு உள்ளது. இந்த பாதிப்பு குறிப்பிட்ட 3 மாவட்டங்களில் மட்டும் கண்டறியப்பட்டு உள்ளது. கடலூர் மற்றும் அரியலூரைச் சேர்ந்த மூன்று மாணவர்கள் மற்றும் ஒரு ஆசிரியருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.

நாடு முழுவதும் கொரோனா பரவல் கட்டுக்குள் வந்துள்ள நிலையில், பல மாநிலங்களில் கல்வி நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டிலும் செப்டம்பர் 1ந்தேதி முதல் 9ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரையிலும், கல்லூரிகளும் கொரோனா பாதுகாப்பு நெறிமுறைகளுடன் திறக்கப்பட்டு உள்ளது.

இந்த நிலையில், சென்னை உள்பட பல மாவட்டங்களில் உள்ள பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதற்கிடையில்  நாமக்கல் மாவட்டம், மாணிக்கம்பாளையம் பகுதியை சேர்ந்த அரசு பள்ளிக்கு முதல் நாள் வருகை தந்த 10ம் வகுப்பு மாணவ மாணவி ஒருவர் உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், அவருக்கு நடத்தப்பட்ட சோதனையில், கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

இதைத்தொடர்நது பள்ளிகளில் கொரோனா நெறிமுறைகளை தீவிரமாக கடைபிடிக்கும்படி ஆசிரியர்களுக்கு பள்ளி கல்வித்துறை அறிவுறுத்தி உள்ளது. இந்த நிலையில், கடந்த 2 நாளில் 3 மாவட்டங்களில் 3 மாணாக்கர்கள் மற்றும் 1 ஆசிரியருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

நாமக்கல் பள்ளி மாணவிக்கு கொரோனா: அனைத்து மாணாக்கர்கள், ஆசிரியர்கள், ஊழியர்களுக்கு கொரோனா சோதனை…