க்னோ

மாநிலங்களவை தேர்தலில் போட்டியிட சமாஜ்வாடி கட்சியில் ஜெயா பச்சன் உள்ளிட்ட மூவர் வேட்பு மனுத் தாக்கல் செய்துள்ளனர்

நாடெங்கும் உள்ள 15 மாநிலங்களில் 56 நாடாளுமன்ற மாநிலங்களவை நாடாளுமன்ற உறுப்பினர்களின் பதவிகாலம் முடிவடைவதால், அந்த இடங்களுக்கான தேர்தல் வருகிற 27 ஆம் தேதி நடைபெறுகிறது. இதற்கான வேட்பு மனு தாக்கல் செய்ய நாளை கடைசி நாளாகும்.

உத்தரப்பிரதேசத்தில் இருந்து சமாஜ்வாடி கட்சி சார்பில் மக்களவைக்குப் போட்டியிடும் 3 வேட்பாளர்களை அந்த கட்சி நேற்று அறிவித்தது. அந்த பட்டியலில் பிரபல நடிகர் அமிதாப்பச்சனின் மனைவி ஜெயா பச்சன், ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரியான அலோக் ரஞ்சன் மற்றும் ராம்ஜிலால் சுமன் ஆகியோர் பெயர்கள் அந்த பட்டியலில் இடம் பெற்று இருந்தன.

நேற்று அவர்கள் 3 பேரும் சட்டசபை வளாகத்தில் தேர்தல் அதிகாரியிடம் வேட்புமனுக்களைத் தாக்கல் செய்தனர். அவர்களுடன் கட்சி தலைவர் அகிலேஷ்யாதவ் உள்ளிட்டோர் இருந்தனர்.

தற்போது உத்தரப்பிரதேச சட்டசபையில் சமாஜ்வாடி கட்சிக்கு தற்போது 108 சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளதால் அந்த கட்சியால் 3 பேரை மாநிலங்களவை நாடாளுமன்ற உறுப்பினர். ஆக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.