வுகாத்தி

சாம் மாநிலத்தில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கால் 3 பேர் உயிர் இழந்துள்ளனர்.

கடந்த 2 தினங்களாக வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான அசாம் மற்றும் அதன் அண்டை மாநிலங்களான மேகாலயா மற்றும் அருணாசலப் பிரதேசத்தில் தொடர் மழை பெய்கிறது.   இப்பகுதிகளில் பல்வேறு ஆறுகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு உள்ளது.  குறிப்பாக கொபிலி ஆற்றில் அபாய அளவை கடந்து வெள்ளநீர் ஓடுகிறது.

அசாம் மாநிலத்தில் இந்த ஆண்டில் முதல் முறையாக ஏற்பட்டு உள்ள இந்த வெள்ள பெருக்கால் கச்சார், திமஜி, ஹொஜய், கர்பி அங்லோங் மேற்கு, நகாவன் மற்றும் கம்ரூப் (மெட்ரோ) ஆகிய 6 மாவட்டங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளன.  வெள்ளத்துக்கு 3 பேர் பலியாகி உள்ளனர்.

இந்த மாவட்டங்களுக்கு உட்பட்ட 94 கிராமங்களைச் சேர்ந்த மொத்தம் 24,681 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.  வெள்ள நீரில் 1,732.72 ஹெக்டேர் நிலங்கள் மூழ்கியுள்ளன என அசாம் மாநில பேரிடர் மேலாண் கழகம் தெரிவித்து உள்ளது.