தார்வாட்

ர்நாடக மாநிலம் தார்வாட் நகரில் கட்டப்பட்டு வரும் கட்டிடம் இடிந்து விழுந்து மூவர் மரணம் அடைந்தனர்.

கர்நாடக மாநிலம் தார்வாட் நகரில் குமரேஷ்வர் நகர் என்னும் பகுதி உள்ளது. இந்த பகுதியில் ஒரு கட்டிடம் ஒன்று கட்டப்பட்டு வருகிறது. நேற்று மாலை இந்த கட்டிடம் திடீரென இடிந்து விழுந்தது. இந்த கட்டிடப்பணியில் ஈடுபட்டிருந்தோர் இடிபாடுகளில் சிக்கிக் கொண்டனர்.

மீட்புப் பணியினர் உடனடியாக விரைந்து சென்று பணியில் ஈடுபட்டனர். இடிபாடுகலில் சிக்கிக் கொண்டவர்களை மீட்கும் போது இரண்டு பேர் உடல்கள் கிடைத்தன. இன்று காலை மேலும் ஒரு உடல் கிடைத்ததால் மரணமடைந்தோர் என்ணிக்கை மூன்றாகி உள்ளது.

இதுவரை சுமார் 43 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர். இதைத் தவிர காயமின்றி 37 பேர் மீட்கப்பட்டுள்ளனர். மேலும் 40 பேர் இடிபாடுகளில் சிக்கி உள்ளதாக கூறப்படுகிறது. காயமடைந்தோர் அருகில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுளன்ர்.

கர்நாடக முதல்வர் குமாரசாமி மீட்புப் பணிகள் போர்க்கால அடிப்படையில் நடைபெறுவதாகவும் உள்ளூர் மக்கள்  பீதி அடைய வேண்டாம் எனவும் கேட்டுக் கொண்டுள்ளார்.