சென்னை:
தமிழ்நாட்டில் இதுவரை இல்லாத அளவாக இன்று ஒரேநாளில் 3.68 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி போடும் பணியை அரசு தீவிரப்படுத்தி உள்ளது. ஆரம்பக்கட்டத்தில் மக்கள் மத்தியில் தயக்கம் காணப்பட்ட நிலையில், அரசின் விழிப்புணர்வு நடவடிக்கையை அடுத்து தடுப்பூசி செலுத்துவோர் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது
தமிழகத்தில் நேற்று 2,327 மையங்களில் கொரோனா தடுப்பூசி போடும் பணி நடந்தது. இதில் இன்று ஒரேநாளில் 3.68 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் இதுவரை 1 கோடியே 10 லட்சம் பேர் தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனர்.
Patrikai.com official YouTube Channel