அபுதாபி: ஆப்கானிஸ்தான் அணிக்கெதிரான 2வது டெஸ்ட் போட்டியில் ஃபாலோஆன் பெற்ற ஜிம்பாப்வே அணி, மூன்றாம்நாள் ஆட்டநேர முடிவில், ஆப்கானிஸ்தானைவிட இன்னும் 234 ரன்கள் பின்தங்கியுள்ளது.

முதல் இன்னிங்ஸில் ஆப்கானிஸ்தான் 545 ரன்கள் எடுத்த நிலையில், ஜிம்பாப்வே அணியோ, தனது முதல் இன்னிங்ஸில் 287 ரன்களுக்கு ஆட்டமிழந்து ஃபாலோஆன் பெற்றது. ஆப்கானிஸ்தானின் ரஷித் கான் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

அந்த அணியின் ரஸா 85 ரன்களும், பிரின்ஸ் மஸ்வார் 65 ரன்களும் அடித்தனர். பின்னர், ஃபாலோஆன் பெற்ற நிலையில், மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் 24 ரன்களை விக்கெட் இழப்பின்றி எடுத்துள்ளது ஜிம்பாப்வே. இதன்மூலம் ஆப்கானிஸ்தானைவிட இன்னும் 234 ரன்கள் பின்தங்கியுள்ளது.