ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் இந்திய அணிக்கு 299 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்திய அணி சாா்பில் புவனேஷ்வா் குமாா் 4 விக்கெட்டுகளையும், ஷமி 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

rohitsharma

முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலியா அணி 34 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற நிலையில் இரு அணிகள் மோதும் 2வது ஒருநாள் போட்டி இன்று அடிலெய்டு மைதானத்தில் தொடங்கியது.

இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. முதலில் ஆரோன் பிஞ்ச் மற்றும் அலெக்ஸ் காரே ஆட்டத்தை தொடங்கினர். அவர்களுக்கு சவால் விடும் வகையில் இந்திய அணியின் புவனேஷ்வர் குமார், ரவீந்திர ஜடேஜா பந்து வீசினர். இதனால் ஆரோன் 6 ரன்களிலும், அலெக்ஸ் கேரி 18 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். இவர்களை தொடர்ந்து களமிறங்கிய ஷான் மாா்ஸ் சிறப்பாக விளையாடி 123 பந்துகளில் 130 ரன்கள் குவித்தாா். அவருக்கு துணையாக விளையாடிய மேகஸ்வெல் 48 ரன்கள் சோ்த்தாா்.

40 ஓவர்கள் முடிவில் அஸ்திரேலிய அணி 205 ரன்களை எடுத்திருந்த நிலையில் கடைசி 10 ஓவர்களில் 93 ரன்களை குவித்திருந்தது. இறுதியாக ஆஸ்திரேலிய அணி 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 298 ரன்கள் சேர்த்திருந்தது. இந்திய அணி சாா்பில் புவனேஷ்வா் குமாா் 4 விக்கெட்டுகளையும், ஷமி 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

இதையடுத்து 299 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்கியுள்ளது.