சென்னை

மிழகத்தில் மாவட்ட வாரியாக ஒமிக்ரான் பாதிப்பு விவரம் வெளியாகி உள்ளது.

தென் ஆப்ரிக்காவில் கண்டறியப்பட்ட உருமாறிய  கொரோனாவான ஒமிக்ரான் பாதிப்பு தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்களில் வேகமாகப் பரவி உள்ளது.  இன்று மாவட்ட வாரியான ஒமிக்ரான் பட்டியலை அரசு வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் இதுவரை மொத்தம் 44 பேர் பாதிக்கப்படுள்ளனர்.  அதில் 27 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு தற்போது 17 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

அதிகபட்சமாகச் சென்னையில் 32 பேர் பாதிக்கப்பட்டு அதில் 16 பேர் டிஸ்சார்ஜ் ஆகி தற்போது 8 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

அடுத்ததாக மதுரையில் 4 பேர் பாதிக்கப்பட்டு அனைவரும் சிகிச்சையில் உள்ளனர்.

செங்கல்பட்டு மாவட்டத்தில் 3 பேர் பாதிக்கப்பட்டு மூவரும் குணம் அடைந்துள்ளனர்

திருவண்ணாமலை மாவட்டத்தில் இருவர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சேலம், திருவாரூர் மற்றும் கன்யாகுமரி மாவட்டங்களில் தலா ஒருவர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.