டெல்லி:  இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 8,309 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளதுடன்,  9,905 பேர் குணமடைந்த னர். அதே வேளையில் சிகிச்சை பலனின்றி 236 பேர் உயிரிழந்துள்ளனர்.

மத்திய சுகாதார அமைச்சகம்  இன்று காலை 8 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில், நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் பதிவான பாதிப்பு, உயிழிப்பு தொடர்பாக அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. அதன்படி, நேற்று புதிதாக  மேலும் 8,309 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதனால்   மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3,45,72,523 ஆக  உயர்ந்து உள்ளது. தினசரி பாதிப்பு 1.09 சதவிகிதமாக குறைந்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றுக்கு மேலும்   236 பேர் இறந்துள்ளனர். இதனால் மொத்த உயிரிழப்பு  4,68,790 ஆக உயர்ந்து இருக்கிறது. உயிரிழந்தோர் விகிதம் 1.36% ஆக குறைந்துள்ளது.

நேற்று ஒரே நாளில் 9,905 பேர் குணமடைந்துள்ளனர். இதனால், குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 3,40,08,183 ஆக உயர்ந்துள்ளது. குணமடைந்தோர் விகிதம் 98.34% ஆக உயர்ந்துள்ளது

தற்போது கொரோனாவுக்கு 1,03,859 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுவோர் விகிதம் 0.30% ஆக குறைந்துள்ளது.

இந்தியாவில்  1,22,41,68,929  பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. நேற்று ஒரே நாளில் 42,04,171 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் நேற்று 10,91,236 பேருக்கு கொரோனா சோதனை செய்யப்பட்டு உள்ளது. இதுவரை 64,02,91,325 சோதனைகள் நடத்தப்பட்டு உள்ளது.