சென்னை:  தமிழக சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “வெளிநாடு மற்றும் அண்டை மாநிலங்களில் இருந்து தமிழகம் வந்தவர்கள் உட்பட 30,016 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.  மாநிலத்திலேயே அதிக பாதிப்பு கோவையில் கண்டறியப்பட்டு உள்ளது.

தமிழகத்தில்   கடந்த 24 மணிநேரத்தில் 30,016 பேர் கொரோனாவால் புதிதாக பாதிப்படைந்துள்ளனர். இன்று தொற்று உறுதியானவர்களில் ஆண்கள் 16,849 பேர். பெண்கள் 13,167 பேர். இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 20,39,716 பேர் ஆக அதிகரித்துள்ளது. கொரோனா பாதிப்பில் கோவை முதலிடத்தில் இருந்து வருகிறது. கோவையில் 3,692 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். சென்னையில்,  2,705 பேர்  பாதிப்படைந்துள்ளனர்.

இதன்மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 20லட்சத்து 39ஆயிரத்து 716ஆக அதிகரித்துள்ளது. சிகிச்சை பெற்றுவருவோரின் எண்ணிக்கை 3,10,157ஆக அதிகரித்துள்ளது. மாநிலம் முழுவதும் சிகிச்சை பலனின்றி இன்று 486பேர் உயிரிழந்துள்ளார். 181பேர் தனியார் மருத்துவமனையிலும், 305பேர் அரசு மருத்துவமனையிலும் உயிரிழந்தனர். இதன்மூலம் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 23,261ஆக அதிகரித்துள்ளது.

இன்று 31,759பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்த நிலையில் இதுவரை குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 17,06,298ஆக அதிகரித்துள்ளது.” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

சென்னையில் ஒரேநாளில் 2705 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இன்று ஒரே நாளில் 26,432 பேர் குணமடைந்துள்ள நிலையில், 401 பேர் உயிரிழந்துள்ளனர்.

அரியலூர் 256
செங்கல்பட்டு 1,314
சென்னை 2,705
கோவையில் 3,692
கடலூர் 590
தர்மபுரி 356
திண்டுக்கல் 352
ஈரோட் 1,743
கல்லக்குரிச்சி 347
காஞ்சீபுரம் 711
கன்னியாகுமரி 927
கரூர் 527
கிருஷ்ணகிரி 493
மதுரை 828
நாகப்பட்டினம் 613
நமக்கல் 897
நீலகிரி 505
பெரம்பலூர் 307
புதுக்கோட்டை 343
ராமநாதபுரம் 308
ராணிபேட் 493
சேலம் 1,492
சிவகங்கை 198
தென்காசி 370
தஞ்சாவூர் 797
தேனி 592
திருப்பதூர் 434
திருவள்ளூர் 1,072
திருவண்ணாமலை 686
திருவாரூர் 563
தூத்துக்குடி 691
திருநெல்வேலி 416
திருப்பூர் 1,697
திருச்சி 1,099
வேலூர் 423
வில்லுபுரம் 660
விருதுநகர் 519