மும்பை:
ஜீ நியூஸ் ஊழியர்களில் 28 பேர் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

ஜீ நியூஸ் நிறுவனத்தில் பணிபுரியும் 28 ஊழியர்கள் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதை உறுதி செய்துள்ள சேனலின் ஆசிரியர் சுதிர் சவுத்ரி, அவர்களை யாரும் மரியாதை குறைவாக நடத்தக் கூடாது என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஜீ நியூஸ் ஊழியர்கள் ஊடகக் குழுவின் ஆங்கில சேனலான WION இல் பணிபுரியும் ஊழியர்களால், மரியாதை குறைவாக நடத்தப்பட்டதாக தெரிய வந்துள்ளது. இதையடுத்து, சுதிர் சவுத்ரி வெயிட்டுள்ள டுவிட்டர் பதிவில், ஜீ நியூஸ் ஊழியர்களில் 28 பேர் கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதிர்ஷ்டவசமாக அவர்கள் அனைவரும் நலமுடன் இருக்கிறார்கள். அவர்கள் விரைவில் குணமடைய வேண்டும் என்று நான் ஆண்டவனை பிரார்த்திக்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

இதுகுறித்து பத்திரிகையாளர் சென் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், ஜீ நியூஸில் 13 பேர் கொரோனாவை இருப்பது உறுதி செய்யப்பட்டது. இவர்கள், ஊழியர்கள் WION கட்டிடத்திற்கு அங்கு அவர்கள் அவமதிப்புடன் நடத்தப்பட்டது சரி அல்ல என்றும் அவர்கள் ஒன்றும் தப்லீக்-கள் அல்ல என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.