ஜெனிவா: உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 216,162,797 ஆக அதிகரித்து உள்ளது.

கடந்த ஒன்றரை ஆண்டுகளை கடந்தும் கொரோனா தொற்று உருமாறிய நிலையில் பரவி உலக நாடுகளை மிரட்டி வருகிறது. தொற்று பரவலை தடுக்க தடுப்பூசி செலுத்தும் பணிகளும் அதிகரிக்கப்பட்டு உள்ளது. இருந்தாலும் முழுமையாக இன்னும் கட்டுக்குள் வரவில்லை.

உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை  21,61,62,797 ஆக உயர்நதுள்ளது.

இதுவரை கொரோனா தொற்று காரணமாக  மரணமடைந்தோர் மொத்தம் எண்ணிக்கை  44,97,686 ஆக அதிகரித்து உள்ளது.

அதே வேலளையில் தொற்று பாதிப்பில் இருந்து  இதுவரை  குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 19,31,48,475  ஆக உயர்ந்துள்ளது.

தற்போது 18,516,636 பேர் சிகிச்சையில் உள்ளனர். அவர்களில் 112,789 பேர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.