சென்னை: தமிழகத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) புதிதாக 5,996 பேருக்கு கொரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் புதிதாக 5,996 பேருக்கு கரோனா தொற்று உறுதியானதால், மொத்த பாதிப்பு 4,09,238 ஆக உயர்ந்துள்ளது.

அதிகபட்சமாக வழக்கம்போல் சென்னையில் மட்டும் 1,296 பேருக்கு தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

இன்று மட்டும் 102 பேர் பலியான நிலையில், இதுவரை உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 52,506- ஆக அதிகரித்துள்ளது.

அதேசமயம் இன்று மேலும் 5,752 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை மொத்தம் 3,49,682 பேர் குணமடைந்துள்ளனர்.