சென்னை: தமிழ்நாட்டில்  கடந்த 24 மணி நேரத்தில், 5,127 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.  சென்னையில் இன்று 308 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. தமிழ்நாடு முழுவதும்  நேற்று 91 பேர் உயிரிழந்து உள்ளனர். 7,159 பேர் குணமடைந்து உள்ளனர்.

தமிழகத்தில் கடந்த 37 நாட்களாக கோவிட் பாதிப்பு குறைந்து வருவது ஆறுதல் தருகிறது. சென்னையில் 46 நாட்களாக கோவிட் பாதிப்பு குறைந்து வருகிறது.

தமிழக சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கையின்படி, தமிழகத்தில்  இதுவரை வரை 3,23,54,310 மாதிரிகள் கோவிட் பரிசோதனை செய்யப்பட்டு உள்ளன. கொரோனா  பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 24,65,874 ஆக அதிகரித்து உள்ளது. கொரோனாவால்  பாதிக்கப்பட்ட ஆண்களின் எண்ணிக்கை 14,41,703 ஆகவும், பெண்களின் எண்ணிக்கை 10,24,133 ஆகவும் அதிகரித்து உள்ளது. 7,159 பேர்  கொரோனா தொற்றிலிருந்து மீண்டு வீடு திரும்பியதை தொடர்ந்து, வைரஸ் பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 23,90,783 ஆக உயர்ந்துள்ளது. நேற்று ஒரே நாளில்  91 பேர் கொரோனா  பாதிப்பு காரணமாக உயிரிழந்துள்ளனர். அதில், 27 பேர் தனியார் மருத்துவமனையிலும், 64 பேர் அரசு மருத்துவமனையிலும் உயிரிழந்துள்ளனர். இதனால்,  உயிரிழந்தோரின் எண்ணிக்கை 32,290 ஆக அதிகரித்து உள்ளது.

சென்னையில் நேற்று 308 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டதுடன்  இதுவரை சென்னையில் 5,31,732 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று 9 பேர் சிகிச்சை பலனின்றி உயிர் இழந்துள்ளார். இதுவரை 8,161 பேர் மரணம் அடைந்துள்ளனர். தொற்றின் பிடியில் இருந்து  315 பேர்  நேற்று குணம் அடைந்துள்ளதுடன், இதுவரை  மொத்தம் 5,20,016 பேர் குணம் அடைந்துள்ளனர். தற்போது சென்னையில் 3,555 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

26.06.2021 நிலவரப்படி, சென்னையில் மொத்தம் 25,05,796 பேருக்கும், 26.06.2021 அன்று 36,049 பேருக்கும் தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

மண்டலம் வாரியாக விவரம்: