டெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில்  மேலும் 13,451 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளதுடன்,  14,021 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டும், 585 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.

மத்திய சுகாதாரத்துறை இன்று காலை 9 மணி வரையிலான நிலவரம் குறித்து வெளியிட்டுள்ள தகவலில்,  முடிந்த 24 மணி நேரத்தில், நாட்டில் கொரோனாவால் புதிதாக பாதித்தவர்கள் 13,451 பேர். இதன் மூலம், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3,42,15,653 ஆக உயர்ந்துள்ளது.

நேற்று மேலும்  585 பேர் கொரோனா தொற்றால் இறந்துள்ளனர். இதன்மூலம்   நாட்டின் மொத்த உயிரிழந்தோர் எண்ணிக்கை 4,55,653 ஆக உயர்ந்துள்ளது.

கடந்த 24மணி நேரத்தில், கொரோனா தொற்றில் இருந்து ஒரே நாளில் 14,021 பேர் குணமடைந்துள்ளனர். இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 3,35,97,339 ஆக உயர்ந்துள்ளது. குணமடைவோர் விகிதம் 98.19 ஆக உயர்ந்துள்ளது.

தற்போது நாடு முழுவதும்  கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 1,62,661 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 55,89,124 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதுவரை 1,03,53,25,577 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.