சென்னை: தமிழ்நாட்டில் இன்று மேலும் 1,657 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளனதுடன், கொரோனா தொற்றால் சிகிச்சை பலனின்றி  19 பேர் உயிரிழந்துள்ளனர்.

தமிழக சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள தகவலின்படி, தமிழ்நாட்டில் மேலும் 1,657 பேருக்கு புதிதாக கொரோனா உறுதியானது. இதன்மூலம் மொத்த பாதிப்பு 26,58,923 ஆக உயர்ந்துள்ளது.

இன்று மேலும் 19 பேர் உயிரிழந்த நிலையில், இதுவரை கொரோனாவுக்கு பலியானோர் மொத்த எண்ணிக்கை 35,509  ஆக அதிகரித்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 1,662 பேர் தொற்றில் இருந்து குணமடைந்துள்ளதால், இதுவரை குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 26,06,153 ஆக உயர்ந்துள்ளது.

தற்போது மாநிலம் முழுவதும் 17,261 பேர் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அதிகபட்சமாக கோவையில் 189 பேருக்கு கொரோனா உறுதியாகி உள்ளது. அடுத்ததாக சென்னையில் இன்று புதிதாக 186 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் 117 பேருக்கும், செங்கல்பட்டு மாவட்டத்தில் 113 பேருக்கும், திருப்பூர் மாவட்டத்தில் இன்று 84 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது.