சென்னை: தமிழகத்தில் இன்று கொரோனா வைரசால் புதிதாக 5,981 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மொத்தம் பாதிப்பு எண்ணிக்கை 4,03,242 ஆக அதிகரித்துள்ளது. தமிழகம் முழுவதும் மாவட்டம் வாரியாக கொரோனா பாதிப்பு என்ன என்பதை தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் புதிதாக 5,981 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 4,03,242 ஆக அதிகரித்துள்ளது.

அதிகபட்சமாக சென்னையில் மட்டும் இன்று 1,286 பேர் பாதிக்கப்பட்ட நிலையில், மொத்தம் பாதிப்பு எண்ணிக்கை 1,30,564 ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் இன்று ஒரேநாளில், 109 பேர் உயிரிழந்துள்ள நிலையில், இதுவரை தமிழகத்தில் கொரோனாவுக்கு உயிரிழந்தோரின் எண்ணிக்கை 6,948 ஆக உயர்ந்துள்ளது.

தமிழகம் முழுவதும் இன்று ஒரேநாளில்  5,870 பேர் தொற்று பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ள நிலையில், இதுவரை 3,43,930 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

தற்போதைய நிலையில், 52,362 பேர் கொரோனா வார்டில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சென்னையில் ஒரு லட்சத்து 30ஆயிரத்து 564 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து கோவையில் 13,398 பேருக்கும், திண்டுக்கல்லில் 6,124 பேருக்கும் திருநெல்வேலியில் 9,018 பேருக்கும், ஈரோட்டில் 2,620, திருச்சியில் 7,072 பேருக்கும், நாமக்கல் 1,821 மற்றும் ராணிப்பேட்டை 9,931, செங்கல்பட்டு 24749, மதுரை 13,685, கரூர் 1,418, தேனி 12,179 மற்றும் திருவள்ளூரில் 23,627 பேருக்கு, தூத்துக்குடியில் 11,008, விழுப்புரத்தில் 6,742 பேருக்கும், கிருஷ்ணகிரியில் 1,977 பேருக்கும், திருவண்ணாமலையில் 9,780, தருமபுரியில் 1,184 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதேபோல் திருப்பூரில் 2,337, கடலூர் 10,076, மற்றும் சேலத்தில் 9,379, திருவாரூரில் 3,156, நாகப்பட்டினம் 2,283, திருப்பத்தூர் 2,711, கன்னியாகுமரியில் 9,094 மற்றும் காஞ்சிபுரத்தில் 16,530 பேருக்கும், சிவகங்கை 3,907 மற்றும் வேலூரில் 10,167 பேருக்கும், நீலகிரியில் 1,497 பேருக்கும், தென்காசி 5,099, கள்ளக்குறிச்சியில் 5,635 பேருக்கும், தஞ்சையில் 6,108, விருதுநகரில் 12,281, ராமநாதபுரத்தில் 4,599 பேருக்கும், அரியலூர் 2,452 மற்றும் பெரம்பலூரில் 1,240 பேருக்கும், புதுக்கோட்டையில் 5,654 பேருக்கும் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

வெளிமாநிலம் மற்றும் வெளிநாடுகளில் இருந்து தமிழகம் வந்த 6,209 பேருக்கு இதுவரை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை வெளிநாடுகளில் இருந்து வந்த 904 பேர், உள்நாட்டு  விமானங்களில் இருந்து வந்த 808 பேர், ரயில், பேருந்து, சொந்த வாகனங்கள் மூலம் வந்த 4,497 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் இதுவரை வெளிமாநிலம், வெளிநாடுகளில் இருந்து ரயில், விமானம், பேருந்து  மற்றும் இதர வாகனங்களில் தமிழகம் வந்தவர்களின் எண்ணிக்கை 7,09,455 -ஆக அதிகரித்துள்ளது.