சென்னை: தமிழ்நாட்டில் இன்று புதிதாக 72 பேருக்கு தொற்று பரவல் உறுதியாகி உள்ளது.  30 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். அதிகபட்சமாக சென்னையில் 52 பேருக்கு பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது. சென்னை ஐஐடியில் பாதிப்பு 111ஆக உயர்ந்துள்ளது.

தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத்துறை இன்று இரவு 8 மணி அளவில் வெளியிட்டுள்ள  கொரோனா அறிவிப்பில், கடந்த 24மணிநேரத்தில், 16,670  சோதனை செய்யப்பட்டு உள்ளது.

இன்று புதிதாக மேலும் 72 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இதன்மூலம் பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 34,53,679 ஆக உயர்ந்துள்ளது. இன்று கொரோனா மரணம் ஏதுமின்றி,  இதுவரை உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 38,025 ஆக தொடர்கிறது.

இன்று மேலும் 30பேர்  தொற்று பாதிப்பில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட நிலையில்,, இதுவரை குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 34,15,250 ஆக உள்ளது.

தற்போது மாநிலம் முழுவதும்  404 பேர்  கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சென்னை 52 பேருக்கு புதிதாக தொற்று உறுதியாகி உள்ளதுடன், செங்கல்பட்டி  9 வழக்குகளும், கோவை – 2 வழக்குகளும் பதிவாகி உள்ளது.  சென்னை ஐஐடியில் மேலும் 32 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி உள்ளது. இதனால்,  ஐஐடியில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 111 ஆக உயர்ந்துள்ளது.

தமிழகஅரசு வெளியிட்டுள்ள கொரோனா தொற்று அறிவிப்பில், ஐஐடி பாதிப்பு இணைக்கப்படவில்லை என தெரிகிறது.