டெல்லி:
ந்தியாவில் கொரோனா பாதிப்பு காரணமாக கடந்த 24 மணி நேரத்தில் பலியானோர் எண்ணிக்கை 83 ஆக உயர்ந்துள்ளதாக  மத்திய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. இதன் காரணமாக மொத்த பலி எண்ணிக்கை  1,389 ஆக உயர்ந்துள்ளது.

இதுகுறித்து மத்திய சுகாதாரத்துறை  வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 2573 பேருக்கு  பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளதாகவும், இதன் காரணமாக மொத்த எண்ணிக்கை  42,836 ஆக உயர்ந்துள்ளது என்று கூறப்பட்டுள்ளது.
இதுவரை சிகிச்சை பெற்று குணமடைந்தவர்கள் எண்ணிக்கை   11,762 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தற்போது நாடு முழுவதும் உள்ள மருத்துவமனைகளில் 29,685 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.