டெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 10,725 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவில் கடந்த சில நாட்களாக 10ஆயிரத்துக்கு கீழே  சரிந்து வந்த கொரோனா மீண்டும் 10 ஆயிரத்தை கடந்தது.  தற்போது, மராட்டியத்திலும் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இந்த நிலையில்,  மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று காலை 8மணி வரையிலான கடந்த 24மணி நேர கொரோனா பாதிப்பு தொடர்பான தகவல்களை வெளியிட்டு உள்ளது.  இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 10 ஆயிரத்து 725 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதியாகி உள்ளது. இதன்மூலம் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 4,43,78,920 ஆக அதிகரித்துள்ளது.

தற்போதைய நிலையில் நாடு முழுவதும் கொரோனா தொற்றுக்கு தற்போது 94,047 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

நேற்று மட்டும் தொற்று பாதிப்புகளுக்குள்ளா  36 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 5,27,488 ஆக உயர்ந்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து 13,084 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதனால், குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 4,37,57,385 ஆக உயர்ந்துள்ளது.

இந்தியாவில் இதுவரை 2,10,82,34,347 பேருக்கு (கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 23,50,665 பேர்) கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது என்று மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

நாடு முழுவதும்   நேற்று ஒரே நாளில் 3,92,837 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாகவும், இதுவரை மொத்தம் 88,39,16,723 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாகவும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐ.சி.எம்.ஆர்) தெரிவித்துள்ளது.