டெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 9,283  பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளதுடன்,  437 பேர் பலியாகி உள்ளனர். அதே வேளையில் 10,949 பேர் குணமடைந்துள்ளனர்.

மத்திய சுகாதார அமைச்சகம் இன்று காலை 8 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில், நாட்டில் கொரோனாவால் புதிதாக பாதித்தவர்கள், குணமடைந்தோர், பலியானோர், இறப்பு விகித நிலவரம் குறித்த அறிக்கை வெளியிட்டு உள்ளது. அதன்படி நாடு முழுவதும் புதிதாக மேலும்  9,283 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதன் மூலம், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3,45,35,763 ஆக உயர்ந்தது.

நேற்று மேலும் 437 பேர் கொரேனாவுக்கு பலியாகி உள்ளனர். இதன்மூலம் நாட்டின் மொத்த உயிரிழந்தோர் எண்ணிக்கை 4,66,584ஆக உயர்ந்தது. உயிரிழந்தோர் விகிதம் 1.35% ஆக குறைந்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 10,949 பேர் குணமடைந்துள்ளனர். இதன்மூலம் குணமடைந்தோர் எண்ணிக்கை 3,39,57,698 ஆக உயர்ந்துள்ளது. குணமடைந்தோர் விகிதம் 98.33% ஆக உயர்ந்துள்ளது

தற்போது நாடு முழுவதும் 1,11,481 பேர் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுவோர் விகிதம் 0.32% ஆக குறைந்துள்ளது.

இந்தியாவில் 1,18,44,23,573 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. நேற்று ஒரே நாளில் 76,58,203 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் நேற்று 11,57,697 சோதனைகள் நடத்தப்பட்டு உள்ளது. இதுவரை 63,47,74,225*சோதனைகள் செய்யப்பட்டு உள்ளன.