சென்னை: தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 5,57,999  ஆக உயர்ந்துள்ளது. இதுவரை உயிரிழந்தோர் எண்ணிக்கை 9010 ஆக அதிகரித்து உள்ளது.

அதிகபட்சமாக சென்னையில்,  நேற்று ஒரே நாளில் 980 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மொத்த பாதிப்பு 1,58,594 ஆக உயர்ந்துள்ளது.

தற்போதைய நிலையில், 9,868 பேர் சிகிச்சை பெற்று வரும் நிலையில், இதுவரை 1,45,629 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.  அதுபோல, 3097 பேர் உயிரிழந்துள்ளனர். நேற்று மட்டும் 11,675 பேருக்கு தொற்று சோதனை செய்யப்பட்டு உள்ளது.

மண்டலம்வாரியாக தொற்றுபாதிப்பு – குணமடைந்தவர்கள்மற்றும்இறந்தவர்கள்-பாதிக்கப்பட்டுள்ளவர்கள் விவரம்