ஜெனிவா: உலக அளவில் கொரோனா பாதிப்பு 14 கோடியே 62 லட்சத்து 20ஆயிரத்து 311 ஆக உயர்ந்துள்ளது.

உலகம் முழுவதும் கொரோனாவின் 2வது அலை உச்சம்பெற்றுள்ளது. தொற்று பரவலை தடுக்கும் வகையில் தடுப்பூசிகள் போடும் பணிகளும் தீவிரமடைந்துள்ளன. இருந்தாலும் 2வது அலை கொரோனா வீரியமாக பரவி வருவதால், உயிரிழப்பும் அதிகரித்து வருகிறது.

உலக அளவில் கொரோனா பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்டிக 14,62,20,311 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை தொற்று பாதிப்பில் இருந்து 12,40.,13,702 பேர் குணமடைந்துள்ளனர். அதே  வேளையில் கொரோனாவால் ஏற்பட்ட உயிரிழப்பு 30 லட்சத்து 98ஆயிரத்து 883 ஆக உயர்ந்துள்ளது.

தொற்று பாதிப்பில் முதலிடத்தில் அமெரிக்கா இருந்து வந்தாலும், ஒருநாள் பாதிப்பில் இந்தியா முதலிடத்தில் இருந்து வருகிறது.