சென்னை: தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் உயர்ந்து வருகிறது. அதே வேளையில் குணமடைவோரின் எண்ணிக்கைக்கும் உயர்ந்து வருகிறது.
தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 5,52,674 ஆக உயர்ந்துள்ளது. அதிக பட்சமாக சென்னையில், தொற்று பாதிக்கப்பட்டுள்ளோர் மொத்த எண்ணிக்கை 1,57,614 ஆக அதிகரித்துள்ளது.

நேற்று ஒரே நாளில் 17 பேர் மரணம் அடைந்துள்ளதால், சென்னையில் மட்டும் இதுவரை 3.088 பேர் கொரோனாவால் பலியாகி உள்ளனர்.
நேற்று 831 பேர் குணம் அடைந்துள்ளதால், இதுவரை மொத்தம் 1,44,511 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர்.
தற்போது 10,015 பேர் சிகிச்சையில் உள்ளனர். கடந்த சில நாட்களாக 10 ஆயிரத்துக்குக் குறைவாக சிகிச்சை பெறுவோர் இருந்து வந்த நிலையில், நேற்று மீண்டும் தொற்று பாதிப்பு அதிகரித்துள்ளது.


மண்டல வாரியாக கொரோனா சிகிச்சை பெறுவோர் விவரம்: வருமாறு:-
கோடம்பாக்கம் – 1,170 பேர்

அண்ணா நகர் – 1,115 பேர்
தேனாம்பேட்டை – 869 பேர்
தண்டையார்பேட்டை – 666 பேர்
ராயபுரம் – 827 பேர்
அடையாறு- 850 பேர்
திரு.வி.க. நகர்- 860 பேர்
வளசரவாக்கம்- 744 பேர்
அம்பத்தூர்- 735 பேர்
திருவொற்றியூர்- 229 பேர்
மாதவரம்- 374 பேர்
ஆலந்தூர்- 678 பேர்
பெருங்குடி- 448 பேர்
சோழிங்கநல்லூர்- 287 பேர்
மணலியில் 134 பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Patrikai.com official YouTube Channel