சென்னை

மிழகத்தில் இன்று 30,580 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மொத்தம் 31,33,990 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்

இன்று தமிழகத்தில் 1,57,732 கொரோனா பரிசோதனை நடந்துள்ளது.  இதுவரை 6,06,03,494 கொரோனா பரிசோதனை நடந்துள்ளது.

இன்று 30,580 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.  இதில் வெளிமாநிலங்களில் இருந்து 13 பேர் வந்துள்ளனர்.   இதுவரை 31,33,990 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கொரோனாவால் இன்று 40 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  இதுவரை 37,218 பேர் உயிர் இழந்துள்ளனர்.

இன்று 24,283 பேர் குணம் அடைந்துள்ளனர். இதுவரை 28,95,818 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

தற்போது 2,00,954 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

இன்று சென்னையில் 6,383 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.  இதுவரை சென்னையில் 6,93,010 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சென்னையில் இன்று 14 பேர் உயிர் இழந்துள்ளனர்.  இதுவரை 8,814 பேர் மரணம் அடைந்துள்ளனர்.

இன்று 7,853 பேர் குணம் அடைந்து மொத்தம் 6,29,624 பேர் குணம் அடைந்துள்ளனர்.

தற்போது சென்னையில் 54,572 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

தமிழக தினசரி கொரோனா பாதிப்பில் கோவை 3,912 உடன் இரண்டாம் இடத்திலும் செங்கல்பட்டு 1,841 உடன் மூன்றாம் இடத்திலும் உள்ளது.

மொத்த பாதிப்பில் இரண்டாவதாக உள்ள கோவை மாவட்டத்தில் 2,87,398 பேர் பாதிக்கப்பட்டு 2,545 பேர் உயிர் இழந்து 2,61,932 பேர் குணம் அடைந்து தற்போது 22,921 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

மொத்த பாதிப்பில் மூன்றாவதாக செங்கல்பட்டு மாவட்டம் உள்ளது.  இதுவரை செங்கல்பட்டு மாவட்டத்தில் 2,12,379 பேர் பாதிக்கப்பட்டு 2,582 பேர் உயிர் இழந்து 1,91,640 பேர் குணம் அடைந்து தற்போது 17,856 பேர் சிகிச்சையில் உள்ளனர்.