ராச்சி

ன்று பாகிஸ்தானில் நடந்த ரயில் விபத்தில் 22  பேர் உயிரிழந்து 80 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.

இன்று பாகிஸ்தானில் ஹசரா எக்ஸ்பிரஸ் ரயில் விபத்துக்குள்ளாகியது.  இந்த விபத்தில் 22 பேர் பலியாகி உள்ளனர். சுமார் 80 பேர் படுகாயமடைந்துள்ளனர். இந்த விபத்து பாகிஸ்தானின் நிதி தலைநகரம் என்று அழைக்கப்படும் கராச்சியிலிருந்து 275 கிமீ தொலைவில் உள்ள இடத்தில்  நடந்துள்ளது.

இதுவரை இந்த விபத்தில் 22 பேர் பலியாகி இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.  இந்த ஹசரா எக்ஸ்பிரஸ் ரயிலின் 10 பெட்டிகள் தடம் புரண்டதால் விபத்து ஏற்பட்டுள்ளது.. மீட்புப் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன.

அதிகாரிகள் இந்த ரயில் பெட்டிகள் தடம் புரண்டதன் காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சிந்த் மாகாணத்தின் பல்வேறு மருத்துவமனைகளிலும், விபத்துக்குள்ளானோரை அனுமதிக்கும் வகையிலான அவசர மருத்துவ ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.