டெல்லி: இந்தியாவில் கடந்த 24மணி நேரத்தில் 5,443 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது. கடந்த சில நாட்களுக்கு தினசரி பாதிப்பு 5ஆயிரத்துக்கும் கீழே குறைந்த நிலையில், தற்போது சற்று கூடியுள்ளது.

மத்திய சுகாதாரத்துறை இன்று காலை 8மணி வரையிலான கடந்த 24மணி நேர கொரோனா பாதிப்பு குறித்த தகவல்களை வெளியிட்டுள்ளது. அதன்படி நேற்று ஒரே நாளில், புதிதாக மேலும்  5,443  பேருக்கு பாதிப்பு உறுதியாகி உள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4 கோடியே 45 லட்சத்து 453 ஆயிரத்து 042 ஆக உயர்ந்தது.

நாடு முழுவதும் தற்போது கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருவோர் எண்ணிக்கை 46,216 லிருந்து 46,342 ஆக அதிகரித்துள்ளது. தினசரி பாதிப்பு விகிதம் 1.61% ஆக உள்ளது.

நேற்று சிகிச்சை பலனின்றி  26 பேர் பலியாகி உள்ளனர்.  மொத்த  பலி எண்ணிக்கை 5,28,429 ஆக உயர்ந்துள்ளது.

கந்த 24மணி நேரத்தில் 5 ஆயிரத்து 291 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டள்ளது.  இதுவரை இந்த தொற்றில் இருந்து மீட்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 39 லட்சத்து 78 ஆயிரத்து 271 ஆக அதிகரித்தது.

நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்டவர்களின் எண்ணிக்கை 2,17,11,36,934 ஆக அதிகரித்துள்ளது.