சென்னை:
மிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இன்று புதிதாக 5,849 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,80,643 ல் இருந்து 1,86,492  ஆக அதிகரித்துள்ளது.

இன்று மட்டும் 58,475 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பரிசோதனை 20,15,147 ஆக இருக்கின்றது.
இன்று ஒரே நாளில்  74 பேர் உயிரிழந்துள்ளனர். முன்னதாக மார்ச் 1ஆம் தேதி முதல் ஜூன் 10ஆம் தேதி வரையில் விடுப்பட்ட மரணங்களின் எண்ணிக்கை 444 சேர்க்கப்பட்டுள்ளது.. இதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3,144 ஆக அதிகரித்துள்ளது.
அதே நேரத்தில் இன்று 4,910 பேர் குணமடைந்து வீட்டுக்கு திரும்பியுள்ளனர். இதனால் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1,26,670  ல் இருந்து 1,31,583 ஆக உயர்ந்துள்ளது. இதனால் தொற்று அடைந்தவர்களில் இதுவரை 70.56 % பேர் குணமடைந்துள்ளனர்.
தற்போது தமிழகத்தில் 51,765 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மாவட்டம் வாரியாக இன்று கொரோனா பாதிப்பு விவரம்:
1.அரியலூர் 26
2.செங்கல்பட்டு 223
3.சென்னை 1171
4.கோயம்புத்தூர் 178
5.கடலூர் 71
6.தர்மபுரி 7
7.திண்டுக்கல் 99
8.ஈரோடு 6
9.கள்ளக்குறிச்சி 86
10.காஞ்சிபுரம் 325
11.கன்னியாகுமரி 152
12.கரூர் 4
13.கிருஷ்ணகிரி 69
14.மதுரை 197
15.நாகப்பட்டினம் 14
16.நாமக்கல் 41
17.நீலகிரி 12
18.பெரம்பலூர் 15
19.புதுக்கோட்டை 59
20.ராமநாதபுரம் 88
21.ராணிப்பேட்டை 414
22.சேலம் 99
23.சிவகங்கை 70
24.தென்காசி 85
25.தஞ்சாவூர் 106
26.தேனி 165
27.திருப்பத்தூர் 60
28.திருவள்ளூர் 430
29.திருவண்ணாமலை 210
30.திருவாரூர் 45
31.தூத்துக்குடி 327
32.திருநெல்வேலி 120
33.திருப்பூர் 29
34.திருச்சி 213
35.வேலூர் 137
36.விழுப்புரம் 105
37.விருதுநகர் 363
விமானநிலைய கண்காணிப்பு
வெளிநாடு – 25 உள்நாடு – 3
ரெயில் நிலைய கண்காணிப்பு – 0
தற்போது சிகிச்சையில் உள்ளோர் மொத்தம்:51,765
தமிழகத்தில் கடந்த மார்ச் 1-ஆம் தேதி முதல் ஜூன் 10-ம் தேதி வரை விடுபட்ட உயிரிழப்புகள்:444
தமிழகத்தில் இதுவரை மொத்தம் உயிரிழந்தோர்:2700+444=3144