ஜெனிவா: உலக நாடுகளில் கொரோனா பாதிப்பு 9 கோடியே 73லட்சமாக உயர்ந்துள்ளது.  உயிரிழப்பும் 21 லட்சத்தை நெருங்கி உள்ளது.

கடந்த 2019ம் ஆண்டு நவம்பரில் சீனாவின் வுகான் நகரில் இருந்து பரவத்தொடங்கிய கொரோனா வைரஸ் ஓராண்டை கடந்தும் இன்னும் கட்டுப்படுத்த முடியாமல் உலக நாடுகள் திணறி வருகின்றன. உலக பொருளாதாரத்தையே புரட்டிப்போட்டுள்ள கொரோனா வைரஸ் தடுக்க உலக நாடுகள் போராடி வருகின்றன.

இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 9,73,08,920 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை  தொற்று பாதிப்பு காரணமாக, 20,83,311 பேர் உயிரிழந்துள்ளனர்.

தற்போதைய நிலையில், 25,375,572  பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.  அவர்களில் 112,255 பேரின்  நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 6,98,50,835 பேர்   குணமடைந்துள்ளனர்.