சிவகங்கை:
ரூ. 2000 நோட்டு என்ற முட்டாள்தனமான முடிவை திரும்பப் பெற்றதில் மகிழ்ச்சி அடைவதாக, ஒன்றிய முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் நினைவு தினத்தையொட்டி சிவகங்கை மாவட்டம் காரைக்குடி கல்லூரிச் சாலையில் உள்ள ராஜீவ் காந்தியின் சிலைக்கு ப.சிதம்பரம் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: ‘ரூ.2000 நோட்டை அறிமுக நிலையிலேயே மக்கள் புறக்கணித்தார்கள். யார் கையில் ரூ.2000 நோட்டு புழக்கத்தில் உள்ளது என்றால் பெரிய நிறுவனங்கள், கட்டுமான நிறுவனங்கள் போன்றவற்றில் தான். விரைவில் ரூ.1000 நோட்டுகள் புழக்கத்தில் கொண்டு வந்தாலும் நான் வியப்படையமாட்டேன்’ என்றார்.