பாவ்நகர்:

குஜராத் மாநிலம் பாவ் நகரில் மேம்பாலத்தில் சென்ற லாரி கீழே விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் 20க்கும் மேற்பட்டோர் பலியானதாக கூறப்படுகிறது.

குஜராத்தின் பாவ்நகர் பகுதியில் திருமண நிகழ்ச்சிக்கு லாரியில் சென்றுகொண்டிருந்தபோது,  ராஜ்கோட்-பாவ்நகர் மாநில நெடுஞ்சாலையில் ரங்காஹோ அருகே மேம்பாலத்தில் சென்றுகொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக விபத்து நிகழ்ந்தது.

இந்த விபத்தில் மேம்பாலத்தில் இருந்து லாரி கீழே விழுந்ததில், அதில் பயணம் செய்தவர்களில் 20பேர் சம்பவ இடத்திலேயே உடல்நசுங்கி பரிதாபமாக பலியாயினர். மேலும் ஒருவர் அருகிலுள்ள மருத்துவமனையில் அனுதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த விபத்து குறித்து காரணம் தெரியவில்லை என்றும், அதுகுறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் கூறப்படுகிறது.