சென்னை:

மிழகத்தில் கொரோனா தொற்று பரவல் நாளுக்கு நாள் உச்சமடைந்து வரும் நிலையில், சென்னையில் மட்டும் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 38ஆயிரத்தை தாண்டியுள்ளது.

தமிழகத்தில், நேற்று ஒரே நாளில் புதிதாக 2115 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியானதைத் தொடர்ந்து மொத்தம், 54,449 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சென்னையில் மட்டும் நேற்று  ஒரே நாளில் 1322 பேர் பாதிக்கப்பட்டனர். தற்போது, வரை சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 38327 ஆக அதிகரித்துள்ளது.  அதில் 16,699 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், 21,098 பேர் தொற்றிலிருந்து பூரண குணமடைந்து வீடு திரும்பினார். மேலும் சென்னையில் 529 பேர் உயிரிழந்துள்ளனர்.

மண்டலம் வாரியாக விவரம்:

சென்னையில் 15 மண்டலங்களில், ராயபுரத்தில் அதிகபட்சமாக 5,981 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி தெரிவித்துள்ளது. மேலும், கோடம்பாக்கத்தில் 4,149 பேரும், தண்டையார் பேட்டையில் 4,896 பேரும், தேனாம்பேட்டையில் 4,652 பேரும், அண்ணாநகரில் 3,972 பேரும், திரு.வி.க.நகரில் 3,356 பேரும், வளசரவாக்கத்தில் 1,638 பேரும், திருவொற்றியூரில் 1,434 பேரும், அடையாற்றில் 2,204 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.